Sunday, October 18, 2009

அதிசய ராகம் ஆனந்த ராகம்

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம்
அந்த மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திரலோகத்துச் சக்கர வாகம்

(அதிசய)

பின்னிய கூந்தல் கருனிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்...அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொளி
முழவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி...அவள் ஒரு பைரவி...அவள் ஒரு பைரவி

(அதிசய)

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறுபாதை போகவில்லையே

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அத்தை மகள் ரத்தினத்தை

அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?

முத்து முத்துப் பேச்சு, கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா?
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க
பெண்னழகை விடுவாரா?
முத்திரையை போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையைக் கெடுப்பாரா?
மூவாசை வெறுத்து ஊராரை மறந்து
முனிவரும் ஆவாரா?
கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி
தொட்டுவிட மனமில்லையா?
கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்குப் பாதி
கருணை வரவில்லையா?

விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா?
மேடைகளில் நின்று தோழர்களைக் கண்டு
சொல்லாமல் விடுவேனா?

அத்தான் என் அத்தான்

அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான்
எப்படி சொல்வேனடி

அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான்
எப்படிச் சொல்வேனடி
அவர் கையைத் தான்
கொண்டு மெல்லாத் தான்
வந்து கண்ணைத் தான்
எப்படி சொல்வேனடி..

அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான்
எப்படி சொல்வேனடி

ஏனத்தான் என்னைப் பார் அத்தான்
கேளத்தான் என்று சொல்லித் தான்
ஏனத்தான் என்னைப் பார் அத்தான்
கேளத்தான் என்று சொல்லித் தான்
சென்ற பெண்ணைத் தான் கண்டு துடித்தான்
அழைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான் ....
எப்படி சொல்வேனடி

மொட்டுத் தான் கன்னிச் சிட்டுத் தான்
முத்துத் தான் உடல் பட்டுத் தான்
மொட்டுத் தான் கன்னிச் சிட்டுத் தான்
முத்துத் தான் உடல் பட்டுத் தான்
என்று தொட்டுத் தான்
கையில் இணைத்தான் வளைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான் ....
எப்படி சொல்வேனடி
அவர் கையைத் தான்
கொண்டு மெல்லாத் தான்
வந்து கண்ணைத் தான்
எப்படி சொல்வேனடி..

அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான் ....
எப்படி சொல்வேனடி\

Sunday, October 11, 2009

அச்சம் என்பது .. மடமையடா..

அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உடமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா

கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
ஆ...ஆ...ஆ.... ஆ...ஆ.........
கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பான் தமிழன்னை
ஆ...ஆ...ஆ....ஆ...ஆ.....
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா

அகர முதல எழுத்தெல்லாம்

=======================================================================
Kannadasan is an asset to tamillanguage and Tamilnadu. In this blog, I try to give some of his excellent songs which I enjoyed.
=========================================================================

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உயர வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே

உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய், அம்மா பேச வைத்தாய்

எண்ணும் எழுத்தெனும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புதுமை ஆற்றல் தந்தாய்
ஐயந்தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஒளி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓம்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி